கேசவா, கோவிந்தா நாராயணா மாதவா என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?
விஷ்ணு
ब्रह्मादि नामानि हरेर्हि देवीं विष्णो:
स्व-नामानि ददौ दिवौकसाम्
नादाद् दीर केशव आदीनि कन्ये
स्वकं पुरं प्रविहायैव राजा
एवं मयोक्तं कन्यके सर्वं एतदे
तत्परं सम्यगारोहणीयम्
- கருட புராணம்
பிரம்மாவின் பெயர் உட்பட, உலகத்தில் உள்ள அனைத்து பெயர்களும் விஷ்ணுவின் பெயர்களே!
விஷ்ணுவின் நாமங்களே! அவரே தான் இஷ்டப்பட்டு தன் பெயர்களை அனைத்து தேவர்களுக்கும் கொடுத்து இருக்கிறார். இருந்த போதிலும், எப்படி ஒரு அரசன் தன் நாட்டையே கொடுத்தாலும், "அரசன்" என்ற தன் அடையாள பெயரை விட்டு கொடுப்பதில்லையோ அது போல, கேசவன் போன்ற குறிப்பிட்ட பெயர்களை யாருக்கும் கொடுக்காமல் தனக்கே வைத்து இருக்கிறார்.
திருப்பதி
गोविन्द नारायण माधव इति
यूयं मया सर्वं आराधि तव्यम्
सर्वे मिलित्वा पुन: एवं खगेन्द्र
समारुहन वैङ्कटाद्रिं गृणन्त:
- கருட புராணம்
ஆதலால், கருடா! வேங்கட மலையில் (திருப்பதி) இருக்கும் ஶ்ரீனிவாசன் அவருகென்றே வைத்து இருக்கும் பெயர்களான "கோவிந்தா நாராயணா மாதவா" என்ற பெயர்களை (நாமங்களை) சொல்லி மீண்டும் மீண்டும் அழைப்பது உத்தமம்.
கேசவா
ब्रह्मणम् आहु: च पुराण माह
क शब्द वाच्यम सर्वलोकेशम् आहु:
ईशम चार्हं रूद्रम् इत्येव चाहु:
तत्प्रेरकं सृष्टि संहार कार्ये
- கருட புராணம்
புராதனமான நாராயணன், ஒரு சமயம் பிரம்மாவை படைத்தார். பிரம்மா உலகங்களை படைத்தார். கேசவன் என்ற இவருடைய பெயரில், "க" என்ற ஒலி "அனைத்து உலகங்களையும் படைத்தவர்" என்ற அர்த்தத்தை குறிக்கிறது.
அது போல, பிரம்மாவின் நெற்றியில் இருந்து சுயமாக வெளிப்பட்ட ருத்ரன், ஈசனாக (தலைவனாக) இருந்து சம்ஹார காரியங்கள் செய்கிறார்.
உண்மையில், படைத்தல் அழித்தல் என்ற இரண்டு காரியத்தையும் இவரே தான் பிரம்மாவாகவும், ருத்ரனாகவும் இருந்து கொண்டு செய்கிறார்.
இதனாலேயே இவருக்கு "கேசவன்" என்ற பெயரும் உண்டு.
நாராயணா
नारायणेति प्रवदन्तीह लोके
नारानुबन्धात् सर्वमुक्ताः खगेन्द्र ।
नाराः प्रोक्ता आश्रयत्वाच्च तेषाम्
अत: अपि नारायण एव वीन्द्र ।
मुक्ताश्च ये तु प्रपदंनु जग्मु:
अण्डोदकं यस्य कटाक्षमात्रात् ॥
- கருட புராணம்
உலகத்தில் மனிதனாக பிறந்த எவனும், நாராயணனை சரணாகதி செய்வதால் மட்டுமே,
சம்சார துக்கத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைய முடியும்.
மனிதன் (நரன் - நார:) என்று உலகத்தில் பிறந்த எவரும் ஆஸ்ரயிக்க (அயன) தகுந்த ஒரே ஒருவர் விஷ்ணுவே.
அதனாலேயே விஷ்ணுவுக்கு "நாராயணன்" என்றும் பெயர். அந்த நாராயணனின் கடாக்ஷத்தை பெற்ற நரன் (மனிதன்) சம்சாரம் என்ற இந்த பெரிய அண்டத்தை விட்டு வெளியேறி மோக்ஷம் அடைகிறான்.
यद् उत्पन्नं तेन नाराः खगेन्द्र
तेषां सदापि आश्रयत्वाच्च वीन्द्र ।
नारायणेति प्रवदन्तीह लोके हि
अनन्त ब्रह्माण्ड विसर्जकत्वात् ॥
- கருட புராணம்
ககேந்திரா! நாரா என்ற சொல்லுக்கு தண்ணீர் என்றும் அர்த்தம் உண்டு. நதியில் உள்ள தண்ணீர் எப்படி அதன் உற்பத்தி ஆகும் இடத்தையே ஆஸ்ரயித்து/அண்டி (அயன) இருக்கிறதோ! அது போல, உலகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் உற்பத்தியான இடமான நாராயணனையே ஆஸ்ரயித்து (அயன) இருக்கிறது.
கோவிந்தா
एवं न अनृतु: परिशंसयन्तो गोविंद
हि न च एव दर्शनम्
गो शब्द वाच्यास्तु समस्त वाचो
गोभि: च सर्वै प्रतिपाध्यते यत:
अतो हि गोविन्द इति स्मृत: सदा
भो वेद-वेद्येति तथा न अनृतु:
- கருட புராணம்
"கோ" என்ற ஒலி, ஆகாசத்தில் பரவி இருக்கும் வேத ஒலியை குறிக்கிறது. அந்த வேத சப்தத்தால் அறிய வேண்டியவர் என்பதால், இவருக்கு "கோவிந்தன்" என்ற பெயரும் உண்டு.
வாசுதேவா
यतस्त्वमेवं वसतीति वासुश्चात्रैव
नित्यं क्रीडते सर्वदैव ॥
- கருட புராணம்
நீங்களே எங்கும் வசிக்கிறீர்கள். நீங்களே இந்த அனைத்து உலகத்திலும், அனைத்து தேவதைகளிலும் அந்தர்யாமியாக இருந்து நீங்களே லீலைகள் செய்கிறீர்கள்.
यतो देवेत्येवमाहुर्महान्तस्त्वतो
हरिं वासुदेवेति चाहुः ।
भो वासुदेवेति ननृतुः सर्वदैव
भो माधवेति ननृतुश्चैव सर्वे ॥
- கருட புராணம்
அனைத்து தேவதைகளுக்கு உள்ளும் நீங்களே வசிப்பதால், உங்களுக்கு "வாசுதேவன்" என்றும் பெயர். நீங்கள் வசிக்காத இடம் என்று ஒன்றுமே இல்லை. உண்மையில் அனைத்து தேவதைகளுமே வாசுதேவனான நீங்கள் தான். மாதவா! உங்களை தவிர வேறு தனியான தெய்வங்கள் என்று ஏதும் இல்லை.
மாதவா
लक्ष्मीपते चेति वदन्ति सर्वे धनीति
शब्दः स्वाभिवाची यतो हि ।
अतोपि आर्या माधवेति ब्रुवन्ति
लक्ष्मीपते पाहि तथैव भक्तान् ॥
- கருட புராணம்
ப்ரபோ! விஷ்ணுவாகிய உங்களை "லக்ஷ்மீபதி" என்றும் அழைக்கிறார்கள். தனத்திற்கு (செல்வத்திற்கு) உரிமையாளனாக நீங்களே இருக்கிறீர்கள். மாதாவான லக்ஷ்மியை உடையவர் (தவ) என்பதால், பண்புள்ளவர்கள், உங்களை "மாதவன்" என்றும் அழைக்கிறார்கள். லக்ஷ்மீபதி!
அசுரகுல குருவான சுக்ராச்சாரியாரின் பெண்ணான தேவயானியை மணந்து கொண்டிருந்த யயாதியிடம் "எக்காரணம் கொண்டும் சர்மிஷ்டையிடம் சேராதே" என்று சொல்லி இருந்தார்.
தேவயானியோடு சர்மிஷ்டையும் அவளின் 1000 கன்னிகைகளும் யயாதியோடு வந்து தங்கினார். அங்கு ஒரு மாளிகையில் வசித்தனர்.
சில காலத்திற்கு பிறகு, தேவயானி ஒரு ஆண் பிள்ளையை பெற்றாள்.
அசுரனான வ்ருஷபர்வனின் பெண் சர்மிஷ்டை, தனக்கும் ஒரு பிள்ளை வேண்டும் என்று யயாதியிடம் கேட்டாள்
சுக்ராச்சாரியார் சொன்னதை யயாதி சொல்ல, சர்மிஷ்டை இவ்வாறு சொன்னாள்,
"சிரிப்பதற்காகவோ, பெண்களிடமோ, திருமணம் செய்வதற்கோ, உயிருக்கு ஆபத்துஏற்படும் சமயத்திலோ, அனைத்து சொத்தும்பறிக்கப்படும் சமயத்திலோ, பொய் பேசலாம் என்று சொல்லி இருக்கின்றனர், இந்த 5 பொய்கள் பாபங்கள் ஆகாது" என்று சொன்னாள்.
न नर्मयुक्तम् अनृतं हिनस्ति
न स्त्रीषु राजन् न विवाहकाले।
प्राणात्यये सर्वधनापहारे
पञ्चानृतान्याहुरपातकानि।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
சாட்சிக்கு நீதிமன்றம் சென்றவன், பொய் சொன்னான் என்றால், அவனை "பதிதன்" என்று சொல்கின்றனர்.
வ்ருஷபர்வன் என்ற அசுரன், தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதியின் மகன் "கசன்", தங்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் குருகுல வாசம் செய்கிறான் என்று தெரிந்து, கொலை செய்தனர்.
சுக்ராச்சாரியார் சஞ்சீவினி கொண்டு உயிர் கொடுத்து காப்பாற்றினார்.
வ்ருஷபர்வாவின் மகள் ஷர்மிஷ்டா ஒரு சமயம் தவறுதலாக சுக்ராச்சாரியாரின் பெண்ணான தேவயானியின் ஆடையை எடுத்து உடுத்தி கொண்டாள்.
இதனை கவனித்த தேவயானி மரியாதை தெரியாதவளே என்று சொல்ல, பிராம்மணனான நீங்கள் பிச்சை எடுத்து வாழ்ந்து, தன் அசுர குல அரசனிடம் கை கட்டி துதி பாடுபவர்கள் தானே என்று திட்டினாள்.
இதனால், இனி இவர்களோடு இருக்க மாட்டேன் என்று தேவயானி தன் தந்தையிடம் சொன்னாள்.
தானும் தன் மகளோடு செல்வதாக சுக்ராச்சாரியார், விருஷபர்வனிடம் சொல்ல, தங்களை விட்டு செல்ல கூடாது.
அசுர குரு சென்று விட்டால், தாங்கள் அனைவரும் அக்னியில் விழுவோம் என்று மன்னிப்பு கேட்டான்.
தன் பெண்ணை சமாதானம் செய்யுங்கள் என்று சொல்ல,
தேவயானி, "வ்ருஷபர்வனின் பெண் சர்மிஷ்டா அவளோடு 1000 கன்னிகைகளோடு எனக்கு வேலைக்காரியாக இருக்க வேண்டும். என்னை என் தந்தை எங்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அங்கு அவளும் என் பின்னே வர வேண்டும்" என்று சொன்னாள்.
दासीं कन्या सहस्रेण शर्मिष्ठामभिकामये।
अनु मां तत्र गच्छेत्सा यत्र दद्याच्च मे पिता।।
அதற்கு சம்மதம் தெரிவித்து, தன் மகளை தேவயாணியோடு அனுப்ப சம்மதித்தான் வ்ருஷபர்வன்.
அப்பொழுது,
त्यजेत् एकं कुलस्यार्थे ग्रामार्थे च कुलं त्यजेत् ।
ग्रामं जनपदस्यार्थे आत्मार्थे पृथिवीं त्यजेत् ।।
ஒரு குலத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த குலத்தில் ஒருவனை இழக்கலாம்.
ஒரு கிராமத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த கிராமத்தில் உள்ள ஒரு குலத்தை இழக்கலாம்.
ஒரு தேசத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை இழக்கலாம்.
தன்னை காக்க வேண்டிய நிலை வந்தால், தான் வைத்திருக்கும் நிலத்தை இழக்கலாம்.
என்று சொன்னான்.
சர்மிஷ்டை, "தன் தவறுக்காக சுக்ராச்சாரியார் போக வேண்டாம். தேவயானியும் போக வேண்டாம்" என்று சொல்லி, அவளுக்கு வேலைக்காரியாக இருக்க சம்மதித்தாள்.
வ்ருஷபர்வா என்பவன் அசுரர்களில் ஒருவன். அவனுக்கு "சர்மிஷ்டா" என்ற பெண் உண்டு.
ப்ராம்மணரான அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியாருக்கு "தேவயானி" என்ற பெண் உண்டு.
இந்த பெண்கள் இருவரும் ஒரு சமயம் நதியில் குளிக்க சென்றார்கள். குளித்த பிறகு, ஆடைகள் கலந்து இருந்ததால், தேவயானி உடையை எடுத்து உடுத்தி கொண்டு விட்டாள் சர்மிஷ்டை.
தேவயானி "ஏ அசுரர் குல பெண்ணே! உங்கள் குல குருவான சுக்ராச்சாரியாரின் பெண்ணான என் ஆடையை எப்படி அணியலாம்?" என்று கேட்டாள்.
இதனால் கோபப்பட்ட அவள்,
"ஏ பிராம்மண பெண்ணே! உன் தந்தை தான் என் தகப்பன் முன் உட்காரும் போதும், படுக்கும் போதும் அடங்கி ஒடுங்கி குனிந்து நின்று எப்பொழுதும் என் தந்தையை துதித்து கொண்டு இருக்கிறார். நீ பிச்சை எடுத்து கொண்டு பிறரை துதி பாடி வாங்கி செல்பவருடைய பெண். நான் துதிக்கப்படுபவரும், கொடுப்பவருமான, தானம் வாங்காதவருமான அசுர குல பெண். ஏ பிச்சைக்காரி! ஆயுதம் இல்லாத நீ, ஆயுதம் உள்ள என்னிடம் பேசுகிறாய். நீ எனக்கு விரோதமாக பேசியதால், நான் இனி உன்னை மதிக்க மாட்டேன்" என்றாள்.
கோபத்தோடு, தேவயானியை பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு, சாகட்டும் என்று அசுர குணத்தோடு சென்று விட்டாள்.
பிறகு, யயாதி என்ற அரசன், வனத்தில் வேட்டைக்கு சென்று இருந்த போது, அவளை காப்பாற்றி அனுப்பி வைத்தான்.
தன் தந்தையான சுக்ராச்சாரியாரிடம் சென்று தான் அவமானப்படுத்த பட்டதை சொல்லி அழுதாள் தேவயானி. கோபப்பட்டாள்.
அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், அசுரர்களை இறந்த பிறகும் உயிர்ப்பிக்கும் சஞ்சீவினியை வைத்து இருந்தார்.
தன் மந்திர பலம் அசுரர்களை விட உயர்நதது என்று சொல்லி சமாதானம் செய்தார்.
பலம் இருந்தாலும், பொறுமை காப்பது அவசியம் என்று சமாதானம் செய்தார்.
தேவயானியை பார்த்து,
"எந்த மனிதன் பிறர் கடுமையான சொற்களால் திட்டினாலும், அதிகமாக பொறுமையை கடைபிடிக்கிறானோ! அவன் நினைத்தால் உலகத்தையே வெற்றி கொள்ள முடியும்.
यः परेषां नरो नित्यमतिवादांस्तितिक्षते।
देवयानि विजानीहि तेन सर्वमिदं जितम्।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
தனக்குள் உண்டாகும் கோபத்தை எவன் குதிரையை அடக்குவது போல அடக்குகிறானோ! அவன் தான் சாரதி என்று அழைக்கப்படுகிறான்.
यः समुत्पतितं क्रोधं निगृह्णाति इयं यथा।
स यन्तेत्युच्यते सद्भिर्न यो रश्मिषु लम्बते।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
தேவயானி! தனக்கு ஏற்படும் கோபத்தை விலக்கி கொண்டு அடக்க தெரிந்தவன் எவனோ! அவனால் உலகத்தையே ஜெயிக்க முடியும் என்று அறிந்து கொள்.
यः समुत्पतितं क्रोधमक्रोधेन निरस्यति।
देवयानि विजानीहि तेन सर्वमिदं जितम्।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
பாம்பு தன் சட்டையை கழற்றி எறிவது போல, எவன் தன் கோபத்தை கழற்றி எறிகிறானோ, அவனே "ஆண்" என்று அறிந்து கொள்.
यः समुत्पतितं क्रोधं क्षमयेह निरस्यति।
यथोरगस्त्वचं जीर्णां स वै पुरुष उच्यते।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
எவன் கோபத்தை அடக்கி கொள்கிறானோ! எவன் பிறர் திட்டுவதை பொறுத்து கொள்கிறானோ, எவன் பிறரால் துன்புறுத்தப்பட்டும் வருத்தம் கொள்ளாமல் இருக்கிறானோ, அவன் தான், தான் நினைத்த காரியத்தை செய்து முடிக்கத்தக்கவன்.
यः संधारयते मन्युं योऽतिवादांस्तितिक्षते।
यश्च तप्तो न तपति दृढं सोऽर्थस्य भाजनम्।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
100 வருடங்களும் ஒவ்வொரு மாதமும் சோம்பல் இன்றி யாகம் செய்யும் ஒருவன் ஒரு பக்கம்,
எதற்கும் கோபம் அடையாதவன் மற்றொரு பக்கம்.
இவர்கள் இருவரில், கோபமே அடையாதவன் தான் மேலானவன்.
यो यजेदपरिश्रान्तो मासिमासि शतं समाः।
न क्रुद्ध्येद्यश्च सर्वस्य तयोरक्रोधनोऽधिकः।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
கோபமில்லாதவனே அனைவரையும் விட சிறந்தவன். ஆசையும் (காமமும்), கோபமும் கீழ்த்தரமான குணங்கள்.
तस्मादक्रोधनः श्रेष्ठः कामक्रोधौ विगर्हितौ।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
கோபமுள்ளவன் தானம் செய்தாலும், யாகம் செய்தாலும், தவம் செய்தாலும் பயன் கிடைக்காது.
அன்புள்ளவளே ! யாரிடத்தில் கோபம் கிடையாதோ, அவன் செய்யும் யாகம், தவம், தானம் அனைத்தும் அதிகமாக பலன் தரும்.
கோபமுள்ளவனிடம் இவை எந்த பலனும் தராது.
இது நிச்சயம்.
क्रुद्धस्य निष्फलान्येव दानयज्ञतपांसि च।।
तस्मादक्रोधने यज्ञतपोदानफलं महत्।
भवेदसंशयं भद्रे नेतरस्मिन्कदाचन।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
எவன் கோபத்துக்கு வசமாகிறானோ, அவன் சந்நியாசி ஆவதற்கு தகுதி அற்றவன், அவன் ரிஷியும் ஆக மாட்டான், யாகம் செய்தவனும் ஆக மாட்டான், தர்ம பலன் எதையும் அடைய மாட்டான், அவனுக்கு இகமும் இல்லை, பரமும் இல்லை.
न यतिर्न तपस्वी च न यज्वा न च धर्मभाक्।
क्रोधस्य यो वशं गच्छेत्तस्य लोकद्वयं न च।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
கோபம் கொள்பவனிடம் அவன் புத்திரன் கூட சேர்ந்து இருக்க மாட்டான். அவன் வேலைக்காரன், நண்பன், சகோதரன், மனைவி, அறம் என்ற தர்மம், சத்யம் என்ற உண்மை எதுவுமே கூட இருக்காது.
पुत्रो भृत्यः सुहृद्भ्राता भार्या धर्मश्च सत्यता।
तस्यैतान्यपयास्यन्ति क्रोधशीलस्य निश्चितम्।।
- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)
சிறு குழந்தைகள் புத்தி இல்லாமல் கோபப்படுவார்கள். அவர்களை போல தானும் கோபப்பட வேண்டும் என்று அறிவுள்ளவன் முற்பட மாட்டான். சிறு குழந்தைகள் கோபத்தின் பலனையும், பொறுமையின் பலனையும் அறிய மாட்டார்கள்"