சூத்திர பெண் யாரை மணக்கலாம்? வியாச மஹாபாரதம்
அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், பல தர்மங்களை யுதிஷ்டிரருக்கு சொன்னார்.
அப்படி சொல்லும் போது, வர்ண கலப்பு எப்பொழுது ஏற்படும் என்று சொல்கிறார்.
भार्याश्चतस्रो राजेन्द्र ब्राह्मणस्य स्वधर्मतः।
ब्राह्मणी क्षत्रिया वैश्या शूद्रा च भरतर्षभ।।
அரசனே! ப்ராம்மண பெண்கள், க்ஷத்ரிய பெண்கள், வைஸ்ய பெண்கள், சூத்திர பெண்கள் ஆசைப்பட்டால் பிராம்மண பையனை மணந்து கொள்ளலாம்.
இன்றைய காலப்படி, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பெண்கள், க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பெண்கள், வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளிபெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் பெண்கள், இவர்கள் ஆசைப்பட்டால் பிராம்மண பையனை மணந்து கொள்ளலாம்
राज्ञां तु क्षत्रिया वैश्या शूद्रा च भरतर्षभ।
वैश्यस्य वैश्या विहिता शूद्रा च भरतर्षभ।।
க்ஷத்ரிய பெண்கள், வைஸ்ய பெண்கள், சூத்திர பெண்கள் விரும்பினால் க்ஷத்ரிய பையனை மணந்து கொள்ளலாம்.
வைஸ்ய பெண்கள், சூத்திர பெண்கள் விரும்பினால் வைஸ்ய பையனை மணந்து கொள்ளலாம்
இன்றைய காலப்படி, க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பெண்கள், வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளி பெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் பெண்கள், இவர்கள் ஆசைப்பட்டால் க்ஷத்ரிய பையனை மணந்து கொள்ளலாம்.
இன்றைய காலப்படி, வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளி பெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் பெண்கள், இவர்கள் ஆசைப்பட்டால் வைஸ்ய பையனை மணந்து கொள்ளலாம்
शूद्रस्यैका स्मृता भार्या प्रतिलोमे तु सङ्करः।
शूद्रायास्तु नरश्रेष्ठ चत्वारः पतयः स्मृताः।।
சூத்திர பெண்கள் விரும்பினால் சூத்திர பையனை மணந்து கொள்ளலாம்.
மேல் வர்ணத்து பெண், கீழ் வர்ணத்திலுள்ள பையனை மணந்து கொண்டால், ஜாதி கலப்பு உண்டாகி விடும்.
சூத்திர பெண், நான்கு வர்ணத்தில் உள்ள எந்த ஆணையும் மணந்து கொள்ளலாம்.
இன்றைய காலப்படி, வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளிப்பெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் ஆண் பையனை மணந்து கொண்டால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் கலப்பு ஜாதியை உருவாக்கி விடுவார்கள்.
वर्णोत्तमायास्तु पतिः सवर्णस्त्वेक एव सः।
द्वौ क्षत्रियाया विहितौ ब्राह्मणः क्षत्रियस्तथा।।
பிறக்கும் பிள்ளைகள் குணக்கலப்போடு பிறக்காமல், தெளிவான குணத்தோடு இருக்க, பெண்கள் தங்கள் வர்ணத்தில் இருக்கும் ஆண் பிள்ளையை மணந்து கொள்வதே சிறந்தது. அதாவது, பிராம்மண வர்ணத்தில் உள்ள பெண், பிராம்மண வர்ண பையனை மட்டுமே மணந்து கொள்வதால் குணம் கலந்த பிள்ளைகள் பிறக்க மாட்டார்கள்.
க்ஷத்ரிய வர்ணத்தில் உள்ள பெண், அந்த க்ஷத்ரிய வர்ண பையனையோ, பிராம்மண வர்ண பையனையோ மணந்து கொள்ளலாம்.
இன்றைய காலப்படி, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பெண்கள், அதே போன்ற பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பையனை மணந்து கொள்ளலாம்.
இன்றைய காலப்படி, க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பெண்கள், அதே போன்ற க்ஷத்ரிய வர்ண தொழில் செய்யும் பையனையோ, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பையனையோ மணந்து கொள்ளலாம்.
वैश्यायास्तु नरश्रेष्ठ विहिताः पतयस्त्रयः।
सवर्णः क्षत्रियश्चैव ब्राह्मणश्च विशाम्पते।।
வைசிய வர்ணத்தில் உள்ள பெண், அந்த வைசிய வர்ண பையனையோ, க்ஷத்ரிய வர்ண பையனையோ, பிராம்மண வர்ண பையனையோ மணந்து கொள்ளலாம்
இன்றைய காலப்படி, வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளி பெண்கள், அதே போன்ற வைஸ்ய வர்ண தொழில் செய்யும் பையனையோ, க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பையனையோ, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பையனையோ மணந்து கொள்ளலாம்.
இவ்வாறு பீஷ்மர் பெண்கள் யார் யாரை மணக்கலாம்? என்று விவரித்தார்.
அனுசாசன பர்வம் 53
No comments:
Post a Comment