Followers

Search Here...

Wednesday 19 June 2024

மிலேச்சன் யார்? ஆதி பர்வம் (மஹாபாரதம்)

மிலேச்சன் யார்?

यत्त्वं मे हृदयाज्जातो वयः स्वं न प्रयच्छसि।

तस्मात्प्रजा समुच्छेदं तुर्वसो तव यास्यति।।

संकीर्ण आचारधर्मेषु प्रतिलोमचरेषु च।

पिशिताशिषु चान्त्येषु मूढ राजा भविष्यसि।।

गुरुदारप्रसक्तेषु तिर्यग्योनिगतेषु च।

पशुधर्मेषु पापेषु म्लेच्छेषु त्वं भविष्यसि।।

- ஆதி பர்வம் (மஹாபாரதம்) 

"உனக்கு பிறக்கும் சந்ததிகள், ஆசார தர்மங்களில் விலகியும், வர்ண கலப்பில் ஏற்கப்படாத மணம் புரிந்து கொண்டும், மாமிசம் சாப்பிடுவதில் பெரும் ஆர்வம் கொண்டும், குருவின் மனைவியை அடைய துணிபவனாகவும், திர்யக் ஜாதியின் நடையுள்ளவர்களும், மிருகத்தை போல (சாப்பிடுவதற்காக வாழ்வது) வாழ்பவர்களும், பாபத்தை செய்வதில் தயக்கம் இல்லாதவர்களுமான மிலேச்சர்களுக்கு நீ அரசனாக இருப்பாய்என்று யயாதி தன் மகனான துர்வஸுவை சபித்தார்.



மக்களை, தர்மத்தில் சரியாக வழிநடத்தி கொண்டு, 2வது இந்திரனை போல யயாதி அரசாட்சி செய்தார்.

இளமையை தன் மகனான புருவிடம் பெற்று கொண்ட யயாதி

தேவர்களை, யாகங்கள் செய்து மகிழ்வித்தார்.

பித்ருக்களை, ஸ்ரார்த்தம் செய்து மகிழ்வித்தார்.

ஏழைகளுக்கு தேவையான கருவிகளை அன்போடு கொடுத்தார். 

ப்ராம்மணர்களுக்கு தேவையானதை கொடுத்தார்.

விருந்தினர்களுக்கு, உணவும், பானமும் கொடுத்தார்.

வைஸ்யர்களின் செல்வத்தை காப்பாற்றினார்.

சூத்திரர்களிடம் இரக்கத்தோடு இருந்தார்.

திருடர்களுக்கு, நியாயமான தண்டனை கொடுத்தார்.

மக்களை, தர்மத்தில் சரியாக வழிநடத்தி கொண்டு, 2வது இந்திரனை போல யயாதி அரசாட்சி செய்தார்.


देवानतर्पयद् यज्ञैः श्राद्धै: तद्वित् पितॄनपि।

दीनान् अनुग्रहै: इष्टैः कामै: च द्विजसत्तमान्।।

अतिथीन् अन्न पानै: च विश: च परिपालनैः।

आनृशंस्येन शूद्रां च दस्यून्सन्निग्रहेण च।।

धर्मेण च प्रजाः सर्वा यथावदनुरञ्जयन्।

ययातिः पालयामास साक्षादिन्द्र इवापरः।।

 - ஆதி பர்வம்


Saturday 18 May 2024

கேசவா, கோவிந்தா நாராயணா மாதவா என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?

கேசவா, கோவிந்தா நாராயணா மாதவா என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?

விஷ்ணு

ब्रह्मादि नामानि हरेर्हि देवीं विष्णो:

स्व-नामानि ददौ दिवौकसाम्

नादाद् दीर केशव आदीनि कन्ये 

स्वकं पुरं प्रविहायैव राजा

एवं मयोक्तं कन्यके सर्वं एतदे 

तत्परं सम्यगारोहणीयम् 

- கருட புராணம்

பிரம்மாவின் பெயர் உட்பட, உலகத்தில் உள்ள அனைத்து பெயர்களும் விஷ்ணுவின் பெயர்களே! 

விஷ்ணுவின் நாமங்களே! அவரே தான் இஷ்டப்பட்டு தன் பெயர்களை அனைத்து தேவர்களுக்கும் கொடுத்து இருக்கிறார். இருந்த போதிலும், எப்படி ஒரு அரசன் தன் நாட்டையே கொடுத்தாலும், "அரசன்" என்ற தன் அடையாள பெயரை விட்டு கொடுப்பதில்லையோ அது போல, கேசவன் போன்ற குறிப்பிட்ட பெயர்களை யாருக்கும் கொடுக்காமல் தனக்கே வைத்து இருக்கிறார்.


திருப்பதி

गोविन्द नारायण माधव इति 

यूयं मया सर्वं आराधि तव्यम्

सर्वे मिलित्वा पुन: एवं खगेन्द्र 

समारुहन वैङ्कटाद्रिं गृणन्त:

- கருட புராணம்

ஆதலால், கருடா! வேங்கட மலையில் (திருப்பதி) இருக்கும் ஶ்ரீனிவாசன் அவருகென்றே வைத்து இருக்கும் பெயர்களான "கோவிந்தா நாராயணா மாதவா" என்ற பெயர்களை (நாமங்களை) சொல்லி மீண்டும் மீண்டும் அழைப்பது உத்தமம். 


கேசவா

ब्रह्मणम् आहु: च पुराण माह 

क शब्द वाच्यम सर्वलोकेशम्  आहु:

ईशम चार्हं रूद्रम् इत्येव चाहु: 

तत्प्रेरकं सृष्टि संहार कार्ये

- கருட புராணம்

புராதனமான நாராயணன், ஒரு சமயம் பிரம்மாவை படைத்தார். பிரம்மா உலகங்களை படைத்தார். கேசவன் என்ற இவருடைய பெயரில், "க" என்ற ஒலி "அனைத்து உலகங்களையும் படைத்தவர்" என்ற அர்த்தத்தை குறிக்கிறது. 

அது போல, பிரம்மாவின் நெற்றியில் இருந்து சுயமாக வெளிப்பட்ட ருத்ரன், ஈசனாக (தலைவனாக) இருந்து சம்ஹார காரியங்கள் செய்கிறார். 

உண்மையில், படைத்தல் அழித்தல் என்ற இரண்டு காரியத்தையும் இவரே தான் பிரம்மாவாகவும், ருத்ரனாகவும் இருந்து கொண்டு செய்கிறார். 

இதனாலேயே இவருக்கு "கேசவன்"  என்ற பெயரும் உண்டு.

நாராயணா

नारायणेति प्रवदन्तीह लोके 

नारानुबन्धात् सर्वमुक्ताः खगेन्द्र  ।

नाराः प्रोक्ता आश्रयत्वाच्च तेषाम् 

अत: अपि नारायण एव वीन्द्र ।

मुक्ताश्च ये तु प्रपदंनु जग्मु: 

अण्डोदकं यस्य कटाक्षमात्रात् ॥

- கருட புராணம்

உலகத்தில் மனிதனாக பிறந்த எவனும், நாராயணனை சரணாகதி செய்வதால் மட்டுமே, 

சம்சார துக்கத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைய முடியும்.

மனிதன் (நரன் - நார:) என்று உலகத்தில் பிறந்த எவரும் ஆஸ்ரயிக்க (அயன) தகுந்த ஒரே ஒருவர் விஷ்ணுவே. 

அதனாலேயே விஷ்ணுவுக்கு "நாராயணன்" என்றும் பெயர். அந்த நாராயணனின் கடாக்ஷத்தை பெற்ற நரன் (மனிதன்) சம்சாரம் என்ற இந்த பெரிய அண்டத்தை விட்டு வெளியேறி மோக்ஷம் அடைகிறான். 


यद् उत्पन्नं तेन नाराः खगेन्द्र 

तेषां सदापि आश्रयत्वाच्च वीन्द्र ।

नारायणेति प्रवदन्तीह लोके हि 

अनन्त ब्रह्माण्ड विसर्जकत्वात् ॥

- கருட புராணம்

ககேந்திரா! நாரா என்ற சொல்லுக்கு தண்ணீர் என்றும் அர்த்தம் உண்டு. நதியில் உள்ள தண்ணீர் எப்படி அதன் உற்பத்தி ஆகும் இடத்தையே ஆஸ்ரயித்து/அண்டி (அயன) இருக்கிறதோ! அது போல, உலகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் உற்பத்தியான இடமான நாராயணனையே ஆஸ்ரயித்து (அயன) இருக்கிறது.


கோவிந்தா

एवं न अनृतु: परिशंसयन्तो गोविंद

हि न च एव दर्शनम्

गो शब्द वाच्यास्तु समस्त वाचो 

गोभि: च सर्वै प्रतिपाध्यते यत:

अतो हि गोविन्द इति स्मृत: सदा 

भो वेद-वेद्येति तथा न अनृतु:

- கருட புராணம்

"கோ" என்ற ஒலி, ஆகாசத்தில் பரவி இருக்கும் வேத ஒலியை குறிக்கிறது. அந்த வேத சப்தத்தால் அறிய வேண்டியவர் என்பதால், இவருக்கு "கோவிந்தன்" என்ற பெயரும் உண்டு. 


வாசுதேவா

यतस्त्वमेवं वसतीति वासुश्चात्रैव 

नित्यं क्रीडते सर्वदैव ॥

- கருட புராணம்

நீங்களே எங்கும் வசிக்கிறீர்கள். நீங்களே இந்த அனைத்து உலகத்திலும், அனைத்து தேவதைகளிலும் அந்தர்யாமியாக இருந்து நீங்களே லீலைகள் செய்கிறீர்கள்.


यतो देवेत्येवमाहुर्महान्तस्त्वतो 

हरिं वासुदेवेति चाहुः ।

भो वासुदेवेति ननृतुः सर्वदैव 

भो माधवेति ननृतुश्चैव सर्वे ॥

- கருட புராணம்

அனைத்து தேவதைகளுக்கு உள்ளும் நீங்களே வசிப்பதால், உங்களுக்கு "வாசுதேவன்" என்றும் பெயர். நீங்கள் வசிக்காத இடம் என்று ஒன்றுமே இல்லை. உண்மையில் அனைத்து தேவதைகளுமே வாசுதேவனான நீங்கள் தான். மாதவா!  உங்களை தவிர வேறு தனியான தெய்வங்கள் என்று ஏதும் இல்லை. 


மாதவா

लक्ष्मीपते चेति वदन्ति सर्वे धनीति 

शब्दः स्वाभिवाची यतो हि ।

अतोपि आर्या माधवेति ब्रुवन्ति 

लक्ष्मीपते पाहि तथैव भक्तान् ॥

- கருட புராணம்

ப்ரபோ! விஷ்ணுவாகிய உங்களை "லக்ஷ்மீபதி" என்றும் அழைக்கிறார்கள். தனத்திற்கு (செல்வத்திற்கு) உரிமையாளனாக நீங்களே இருக்கிறீர்கள். மாதாவான லக்ஷ்மியை உடையவர் (தவ) என்பதால், பண்புள்ளவர்கள், உங்களை  "மாதவன்" என்றும் அழைக்கிறார்கள். லக்ஷ்மீபதி! 

உங்கள் பக்தர்களை நீங்களே காக்க வேண்டும்.

Sunday 5 May 2024

பெண்களிடம் பொய் சொல்வதால் பாபம் ஏற்படாது.. வ்யாஸ மஹாபாரதம்

அசுரகுல குருவான சுக்ராச்சாரியாரின் பெண்ணான தேவயானியை மணந்து கொண்டிருந்த யயாதியிடம் "எக்காரணம் கொண்டும் சர்மிஷ்டையிடம் சேராதே" என்று சொல்லி இருந்தார்.

தேவயானியோடு சர்மிஷ்டையும் அவளின் 1000 கன்னிகைகளும் யயாதியோடு வந்து தங்கினார். அங்கு ஒரு மாளிகையில் வசித்தனர்.

சில காலத்திற்கு பிறகு, தேவயானி ஒரு ஆண் பிள்ளையை பெற்றாள்.


அசுரனான வ்ருஷபர்வனின் பெண் சர்மிஷ்டை, தனக்கும் ஒரு பிள்ளை வேண்டும் என்று யயாதியிடம் கேட்டாள்


சுக்ராச்சாரியார் சொன்னதை யயாதி சொல்ல, சர்மிஷ்டை இவ்வாறு சொன்னாள்,

"சிரிப்பதற்காகவோ, பெண்களிடமோ, திருமணம் செய்வதற்கோ, உயிருக்கு ஆபத்து ஏற்படும் சமயத்திலோ, அனைத்து சொத்தும் பறிக்கப்படும் சமயத்திலோ, பொய் பேசலாம் என்று சொல்லி இருக்கின்றனர், இந்த 5 பொய்கள் பாபங்கள் ஆகாது" என்று சொன்னாள்.

न नर्मयुक्तम् अनृतं हिनस्ति

न स्त्रीषु राजन् न विवाहकाले।

प्राणात्यये सर्वधनापहारे

पञ्चानृतान्याहुरपातकानि।। 

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 

சாட்சிக்கு நீதிமன்றம் சென்றவன், பொய் சொன்னான் என்றால், அவனை "பதிதன்" என்று சொல்கின்றனர்.

पृष्टं तु साक्ष्ये प्रवदन्तमन्यथा

वदन्ति मिथ्या पतितं नरेन्द्र।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 

ஒரு தேசத்தை காக்க, ஒரு ஊரை இழக்கலாம்.. தன்னை காக்க, தன் நிலத்தை இழக்கலாம்.. வ்யாஸ மஹாபாரதம்

வ்ருஷபர்வன் என்ற அசுரன், தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதியின் மகன் "கசன்", தங்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் குருகுல வாசம் செய்கிறான் என்று தெரிந்து, கொலை செய்தனர்.

சுக்ராச்சாரியார் சஞ்சீவினி கொண்டு உயிர் கொடுத்து காப்பாற்றினார்.

வ்ருஷபர்வாவின் மகள் ஷர்மிஷ்டா ஒரு சமயம் தவறுதலாக சுக்ராச்சாரியாரின் பெண்ணான தேவயானியின் ஆடையை எடுத்து உடுத்தி கொண்டாள். 

இதனை கவனித்த தேவயானி மரியாதை தெரியாதவளே என்று சொல்ல, பிராம்மணனான நீங்கள் பிச்சை எடுத்து வாழ்ந்து, தன் அசுர குல அரசனிடம் கை கட்டி துதி பாடுபவர்கள் தானே என்று திட்டினாள்.


இதனால், இனி இவர்களோடு இருக்க மாட்டேன் என்று தேவயானி தன் தந்தையிடம் சொன்னாள்.

தானும் தன் மகளோடு செல்வதாக சுக்ராச்சாரியார், விருஷபர்வனிடம் சொல்ல, தங்களை விட்டு செல்ல கூடாது. 

அசுர குரு சென்று விட்டால், தாங்கள் அனைவரும் அக்னியில் விழுவோம் என்று மன்னிப்பு கேட்டான்.


தன் பெண்ணை சமாதானம் செய்யுங்கள் என்று சொல்ல, 

தேவயானி, "வ்ருஷபர்வனின் பெண் சர்மிஷ்டா அவளோடு 1000 கன்னிகைகளோடு எனக்கு வேலைக்காரியாக இருக்க வேண்டும். என்னை என் தந்தை எங்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அங்கு அவளும் என் பின்னே வர வேண்டும்" என்று சொன்னாள்.

दासीं कन्या सहस्रेण शर्मिष्ठामभिकामये।

अनु मां तत्र गच्छेत्सा यत्र दद्याच्च मे पिता।।


அதற்கு சம்மதம் தெரிவித்து, தன் மகளை தேவயாணியோடு அனுப்ப சம்மதித்தான் வ்ருஷபர்வன்.

அப்பொழுது, 

त्यजेत् एकं कुलस्यार्थे ग्रामार्थे च कुलं त्यजेत् ।

ग्रामं जनपदस्यार्थे आत्मार्थे पृथिवीं त्यजेत् ।।

ஒரு குலத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த குலத்தில் ஒருவனை இழக்கலாம். 

ஒரு கிராமத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த கிராமத்தில் உள்ள ஒரு குலத்தை இழக்கலாம்.

ஒரு தேசத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை இழக்கலாம்.

தன்னை காக்க வேண்டிய நிலை வந்தால், தான் வைத்திருக்கும் நிலத்தை இழக்கலாம்.

என்று சொன்னான்.


சர்மிஷ்டை, "தன் தவறுக்காக சுக்ராச்சாரியார் போக வேண்டாம். தேவயானியும் போக வேண்டாம்" என்று சொல்லி, அவளுக்கு வேலைக்காரியாக இருக்க சம்மதித்தாள்.