Followers

Search Here...

Sunday 19 May 2019

அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று நினைப்பவர்களுக்கு ஒரே கேள்வி...நம் பெருமையை நாம் அறிவோம்...

1498ADல் 'வாஸ்கோட காமா' போர்ச்சுகல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்தான். அன்று ஆரம்பித்தது கிறிஸ்தவ நுழைவு, ஆங்கில மோகம், பாரத தேசத்தில்.



அதற்கும் முன்,
808ADல் இஸ்லாமிய மதம் ஈரான், ஆப்கான் போன்ற பௌத்த தேசங்களாக மாறி இருந்த ஹிந்து தேசங்களில் நுழைந்தன.
அதன் தொடர்ச்சியாக கோரி அரசாட்சி மூலம் இஸ்லாமிய ஊடுருவல் ஆப்கான், பாகிஸ்தான், இந்தியா வரை நுழைந்தது.
த்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், புஷ்பக விமானத்தில் (flight) ராமர் ஒரே நாளில் இலங்கையில் இருந்து, அயோத்தி திரும்பினார் என்று வருகிறது. இலங்கை, அயோத்தி கற்பனை இடமில்லை. இன்றும் இருக்கிறது.



துவாபர யுகத்தில், 5000 வருடத்திற்கு முன் நடந்த மகாபாரத போரில், வெறும் அம்பு மட்டும் எய்து சண்டை இடவில்லை. அதையும் தாண்டி, அஸ்திரம், சஸ்திரம் (atom, nuclear bomb) என்ற உலகை அழிக்கும் ஆயுதங்களை துரோணர், அஸ்வத்தாமா பயன்படுத்தனர் என்று வருகிறது. உத்திர பிரதேசம் கற்பனை இடமில்லை.
அர்ஜுனன் சில வருடங்கள் வனவாச சமயத்தில், பூலோகத்தில் இருந்து கிளம்பி, சொர்க்க லோகம் (space) சென்று இந்திரனோடு இருந்தான். அங்கு தேவலோகத்தில் உள்ள ஊர்வசி, தன்னை மணந்து கொள்ள கேட்டும், மறுத்தான் அர்ஜுனன் என்றதும் "ஒரு வருடம், நீ ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத பேடியாக போ" என்று சபித்தாள் என்று பார்க்கிறோம்.
திருமூலர் கூடு விட்டு கூடு பாயும்  ஆற்றல் பெற்ற சித்தராக வாழ்ந்தார் என்று அவர் சரித்திரம் காட்டுகிறது.
இறந்தவர்களை கூட உயிர் பிழைக்க வைக்கும் சஞ்சீவி போன்ற மூலிகைகள் (medicine) ராமாயண காலத்தில் பயன்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது.



த்ரேதா யுகத்தில், 60000 வருடம் வாழ்ந்த தசரத சக்கரவர்த்தி,  ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யலாம் என்று நினைத்த போது, அவர் தலை முடியில் ஒரே ஒரு முடி மட்டும் வெள்ளையாக (beauty science) இருந்தது என்று சொல்லப்படுகிறது.
இருக்கும் இடத்திலேயே எங்கோ நடக்கும் விஷயங்களை பார்க்கும் (drone) சக்தி உடைய ரிஷிகள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

இதையும் தாண்டி, என்ன நடக்க போகிறது என்றும் சொல்லக்கூடிய ஞானிகள், ரிஷிகள் இருந்தனர் என்றும் காட்டப்படுகிறது.
எங்கேயோ நடப்பதை பார்க்கும் சக்தியை, சக்தி இல்லாதவர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் எங்கோ நடக்கும் சம்பவங்களை பார்க்க வைக்கும் (video chat) சக்தி உள்ளவர்களாக இருந்தனர் என்று சஞ்சயன் சபையில் இருந்து கொண்டே மகாபாரத போரை பார்த்து த்ருதராஷ்டிரனுக்கு சொன்னான் என்று வருகிறது.


தேவகியின் ஏழாவது குழந்தை, அவள் கர்ப்பத்தில் இருந்து, ரோகினியின் கர்பத்துக்கு (sarogate mother) ஒரே ராத்திரியில் இடம் மாறி, பலராமர் அவதரித்தார் என்று வருகிறது.
பரதன் ராமரை பட்டாபிஷேகம் செய்து அயோத்திக்கு கூட்டி வர, காட்டுக்கு செல்லும் போது, கூட வந்த அயோத்தி மக்களுக்கு ஒரு இடத்திலிருந்து மரங்களை வேரோடு எடுத்து, போகும் வழியெல்லாம் நிழலுக்கு நட்டு (machinery), உணவுக்கு ஏற்பாடு செய்து கஷ்டம் தெரியாமல் கூட்டி கொண்டு போனார் என்றால், எந்த இயந்திரம் கொண்டு மரங்களை பெயர்த்து, இன்னொரு இடத்தில் வைத்தார்கள் என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.




அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் என்று அனைத்திலும் நாம் வல்லவர்களாக இருந்தோம் என்று நம் சரித்திரங்களே காட்டுகிறது.
அது சம்பந்தமான விஷயங்கள் ஒவ்வொரு சரித்திரத்திலும் சொல்லப்படுகிறது.
கோவிலில் சென்றால், கல் தூணில் 7 ஸ்வரங்கள் கேட்கிறது..
இன்று வரை துரு பிடிக்காத இரும்பை தயாரித்து, எப்படி துரு பிடிக்காத இரும்பை தயார் செய்தனர் என்று இன்று வரை இன்றைய அறிவியல் தலை சொறிந்து கொண்டு உள்ளது...



ஆச்சரியங்கள் இன்றும் காட்சி பொருளாக நமக்கு தெரிகிறது.

"அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று பிதற்றுபவர்களுக்கு ஒரே கேள்வி...

808ADக்கு முன் இந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியராகள், உலகிற்கு அறிவியல் சம்பந்தமாக என்ன கண்டுபிடிப்பு செய்து காட்டினீர்கள்?

குண்டூசிக்கு ஓட்டை எங்கு போட வேண்டும் என்பது கூட இந்தியாவில் கால் வைத்ததற்கு பின்பு தான் மேற்கத்தியர்களுக்கு மூளையில் உதித்தது என்றால், இந்திய மண்ணில் இவர்கள் கொள்ளையடித்தது பொன்னை மட்டுமா?

Aeroplane ஆரம்பித்து sarogate mother வரை வளர்ந்த இன்றைய அறிவியல் வளர்ச்சி இந்தியாவுக்கு இவர்கள் கால் பதிக்கும் முன் ஏன் நடக்கவில்லை?
இவை எல்லாமுமே நம்மிடம் இருந்தது தானே... அழிந்து விட்டதா, திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டதா?

திருடி சென்றது நம் செல்வத்தை மட்டுமா?
Max Muller போன்ற பல கிறிஸ்தவர்கள் எதற்காக எங்கள் வேத சாஸ்திரங்களை படித்து, பலருடன் பேசி அதன் அர்த்தத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு, அவர்கள் மொழியில் மொழி பெயர்க்க, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்?
சம்ஸ்க்ரிதம் படிக்க மாட்டேன் என்று உளறி கொண்டு இருக்கும் நாம் ஒரு புறம் இங்கு இருக்க, நம் சாஸ்திரத்தை ஏன் இவர்கள் படித்தார்கள்?

இந்தியாவுக்குள் நுழைந்த பின், மேற்கு நாட்டினருக்கு திடீரென்று ஆராய்ச்சி கூடங்கள் (research and dev center) அமைக்கும் பழக்கம் ஏன் ஏற்பட்டது?

பாரத மண்ணில் பேச்சு வழக்கில் இருந்த பொது மொழியான சமஸ்கரித மொழி ஏன் இவர்களால் அழிக்கப்பட்டது?

தேனும், குல்லாவும் மட்டுமே வைத்து இருந்த இவர்கள், இந்தியாவுக்குள் கால் வைப்பதற்கு முன், இந்த மேற்கு நாடுகள் எதை உலக நன்மைக்காக கண்டு பிடித்தனர்?

ஏதாவது உருப்படியான ஆராய்ச்சிகள் உண்டா?
ஒன்று கூட இல்லையே...
நம் நாட்டில் நுழைய தானே உலகமே ஆர்வம் காட்டியது...

இந்த பாரத மண்ணில் இருந்து திருடி, நமக்கே வேறு மாதிரி விற்று, இன்று மார்தட்டி கொள்கின்றனர்...

வெட்கப்பட வேண்டியது பாரத மக்கள் தான்.
சமஸ்கரித மொழியை ஒழித்து கட்டிய ஆங்கிலேயன், நமக்குள் பிரிவை ஏற்படுத்தி,
இது ப்ராம்மணன் மட்டுமே கற்றான் என்று மொழி பகையையும் ஊட்டி,
பிராம்மண பகையையும் ஊட்டி,
தன் ஆங்கில மொழியை படிக்க வைத்தான்.

இதற்கு காங்கிரஸ் கட்சியும் துணையாக நின்று, விடுதலை கிடைத்த பின்னும், சம்ஸ்க்ரிதம் பொது மொழியாக ஆக்கப்பட்டு வேத சாஸ்திரங்கள் அனைவருக்கும் கொடுக்க வழி செய்யவில்லை.
விளைவு,
சாணக்யன் வரை படித்த அர்த்த சாஸ்திரத்தை (financial mgmt) படித்து தெரிந்து கொள்ள முடியாமல், கிறிஸ்தவன் நமக்கு கொடுத்த MBAவை படிக்க தள்ளப்பட்டோம்.
ஆங்கிலத்திலேயே படிப்பதால், நம் அறிவும் அவனுக்கு பயன்பட்டு வேகமாக அறிவியல் முன்னேற்றம் அவன் செய்து காட்டுவது போல தெரிகிறது..
இன்று கூட உலகமெங்கும், இந்தியர்கள் தானே கீழே வேலை செய்கிறார்கள்.


சாணக்யன் இருந்த காலம் வரை நம் நாட்டிற்கு வெளி நாட்டவன் ஓடி ஓடி வந்தான்..
அவன் படிப்பை அவன் மொழியிலேயே நாம் படிக்க ஆரம்பித்த பின், இந்திய நாடே வெளிநாட்டை நம்பி வாழும் நிலைக்கு ஆளாகி விட்டது.
ப்ராம்மணன் தெய்வ சம்பந்தமான சாம வேதம், ரிக் வேதம், யஜுர் வேதம் மட்டுமே முக்கியமாக கற்றான்.
அது மட்டும் தானா சம்ஸ்க்ரிதம்..?

மற்ற ஜாதி மக்களும் சம்ஸ்க்ரிதம் தானே பொது மொழியாக பேசினார்கள்.
இன்று ஆங்கிலம் பொது மொழி போல, தமிழன் தன் வியாபரத்துக்காக கன்னட தேசம் சென்று சம்ஸ்க்ரிதம் தானே பேசியுள்ளான்.
கோவிலை கட்டிய ஸ்தபதியும்,  ஸ்தாபத்யம் (engineering) என்ற வேதத்தை அறிந்து இருந்தான். அவன் கட்டிய கோவில்கள் தானே இன்று வரை நம் கண் முன் காட்சியாக நிற்கிறது...
இன்றுவரை அந்த காலத்தில் கட்டிய கோவிலை போல இன்றைய அறிவியல் கட்ட முடியவில்லையே...
இன்று வரை கரிகாலன் கட்டிய அணை உடையவில்லையே.
எத்தனை அற்புதமான அறிவு செல்வத்தை மொழி பகையின் காரணமாக இழந்து, அதே கல்வியை கிறிஸ்தவன் கொடுத்த ஆங்கிலத்தில் படித்து, அவன் நாட்டிற்கு வேலை செய்து, இந்தியாவே சேவை மையமாக ஆகி விட்டோம்...


தன் வாழ்க்கையை தானே நிர்ணயம் செய்த பாரத மக்களை, காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை அடைந்த உடனேயே கீழ் கண்ட சாஸ்திரங்களை படிக்க வழி செய்து இருந்தால், இன்று நாமும் ஜப்பான், சீனாவுக்கும் மேல் சென்று இருப்போம்.
ஆங்கில வழி கல்வியால், அற்புதமான சமஸ்கரித மொழியை பேச்சு வழக்கில் இருந்தும், பொது மொழியாகவும் இருக்க விடாததால், இன்று இந்திய மக்கள் யாவரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாகாரன் விழித்து இருக்கும் இரவில் முழித்து, அவனுக்கு கால் பிடித்து விட்டு கொண்டு இருக்கிறான்.
சமஸ்கரித மொழியை அழிக்கிறேன் என்று, காங்கிரஸ் அரசு, பெரும் செல்வமான கல்வியை மக்களுக்கு கொடுக்காமல் வஞ்சம் செய்து, புதிதான ஆங்கில மொழியை கற்க வைத்து, அவர்கள் கண்டுபிடித்த அறிவியலை நாமும் படிக்க வைத்து, நம்மையும் அதே ஆங்கில வழியிலேயே ஆராய்ச்சி செய்ய வைத்து, நாம் பின்னணியில் வேலை செய்து கண்டுபிடிக்க, மேற்கத்திய கண்டுபிடிப்புகள் என்று நமக்கே சொல்லி, இலவச வேலைக்காரன் போன்று ஆக்கி விட்டது காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளில்.

நாம் அனைவரும் கற்று இருந்த கல்வி செல்வங்கள்... நாம் அனைவருமே இழந்து விட்ட சில கல்வி செல்வங்கள்...இதோ..



அர்த்த சாஸ்திரம் (finance mgmt),
காம சாஸ்திரம் (art of love),
யோக சாஸ்திரம்,
சித்த மருத்துவம்,
ஆயுர்வேதம் (medicine)
காந்தர்வ வேதம் (music)
தனுர் வேதம்(army)
சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
சந்தஸ் (expert in poetic metres)
ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
ஸ்ம்ருதி,
யோகம் (expert in meditation, contemplation and liberation)
ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
நியாயம் (Expert in exploring sources of knowledge)
என்று பல வித சாஸ்திரங்கள், பாரத மக்கள் அனைவருமே கற்றார்களே...
துக்ளக் ஆட்சியில் தங்கத்தால் காசு அடிக்க தங்கம் போதாமல் போக, செப்பில் அதே மதிப்புள்ள காசுக்கள் இனி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன்,
இஸ்லாமியனாக மாறிய ஹிந்துக்களுக்கு வரி சலுகையும், கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு வருமானத்தில் முக்கால் பங்கு வரியும் விதித்து துக்ளக் பெரும் சூழ்ச்சி செய்து இஸ்லாமிய தேசமாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
இவன் அரசாட்சி சமயத்தில் தான் மதுரை வரை சுல்தான் ஆட்சி நடக்க ஆரம்பித்தது. 80 வருடங்கள் தமிழ் நாட்டை சூழ்ந்த இஸ்லாமியர்களை, விஜயநகர இளவரசன் கம்பண்ணா முடிவுக்கு கொண்டு வந்தார்.
இவர் வராது போயிருந்தால், இன்று கும்பகோணத்த்தில், தஞ்சையில் ஒரு கோவில் இருந்து இருக்காது.

ஹிந்துக்களை கிள்ளுக்கீரை என்று கொன்றார்கள் இஸ்லாமியர்கள் நம் நாட்டில் புகுந்து கொண்டு.
உலோகங்களை (metallurgy) பற்றிய அறிவுடன் இருந்த நம் பாரத ஹிந்து மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் அதே போன்ற செப்பு காசு அடித்து விட, பாரத தேசமெங்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, துக்ளக் ஆட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சி நடத்தி கொண்டிருந்த பல ஆமிர், வாஜிர்கள், அவரவர்கள் சுல்தான்கள் என்று தானே சொல்லிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஒரு நாட்டின் காசை சாதாரண ஊர் மக்கள் கூட செய்ய முடியும் என்றால் எத்தனை திறமை கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்று புறம் பார்க்க வேண்டியுள்ளது. தங்கத்தில் ஏன் காசுகள் வைத்து இருந்தனர் என்றும் புரிகிறது. விலையுயர்ந்த தங்கம் சர்வ சாதாரணமாக இந்த பாரத தேசத்தில் பயன்பட்டு இருந்தது என்றும் தெரிகிறது...



மொழி பகையை தாண்டி, அவரவர் தாய் மொழி அறிவும், பொது மொழியாக சமஸ்கரித, ஆங்கில அறிவும் குழந்தைகள் முதல் கல்லூரி வரை புகட்டப்படும் போது, மீண்டும் இந்த 120 கோடி ஜனங்களில், ஒரு 10 கோடி மக்களாவது இந்த சாஸ்திரங்களை மீண்டும் தோண்டி எடுத்து, இந்திய நாட்டை சுயசார்புள்ள நாடாக மீண்டும் ஆக்கி காட்ட முடியும்.

காங்கிரஸ் போன்ற மேற்கத்திய மோகம் கொண்டவர்கள் இந்தியாவுக்கு கிடைத்த அருமையான சுதந்திரத்தை கோட்டை விட்டு, இன்றைய நிலையில் அடிமை வாழ்வு வாழ செய்து விட்டனர்.
பேச்சும் ஆங்கில வழி ஆகி விட்டதால், நம் அறிவும், ஆராய்ச்சியும் மேற்கு நாடுகள் மென்மேலும் அறிவியலில் வளர உதவி செய்கிறது.  ஆனால் இங்கோ, பாரத மக்கள் உலக நாடுகளுக்கு உழைக்கும் கூலியாகி விட்டான்.

இந்த நிலை மாற, பாரத கலாச்சாரத்தை மீட்டு, ஜப்பான், சீனா போன்று சுயசார்புள்ள நாடாக ஆக்க, பாரத கலாச்சாரத்தை மீட்கும் எண்ணம் கொண்ட கட்சிகளே நாட்டிற்கு அடுத்த 30 வருடங்களுக்காவது தேவை.

நம் அறிவு, ஆராய்ச்சி நம் தாய் மொழியாகவும், நம் பொது மொழியான சமஸ்கரிதம் மூலமே நடக்க ஆரம்பித்தால், நாமும் சீனா, ஜப்பான் போன்று சுய சார்புள்ள நாடாக, மனிதர்கள் நிம்மதியாக வாழ இயலும். ஆங்கிலே வழியில் ஆராய்ச்சிகள் பேசப்படாமல் இருக்கும் போது, நாம் பேசும் ரகசியங்களும் பாதுக்கப்படும். வளர்ச்சி தடைப்படாமல் மீண்டும் பாரத் மக்கள் அவரவர் வீட்டில், ஊரில், கிராமத்தில், பாரத மண்ணில் இருந்து கொண்டே, வாழ இயலும்.



ஹிந்துக்கள் சிந்தனைக்கு....


Wednesday 15 May 2019

ஹிந்துக்கள் ஏன் கேலிக்கு ஆளாக வேண்டி உள்ளது?ஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்து, தெய்வ சம்பந்தமான விஷயங்களில் இருப்பது பற்றி ஒரு அலசல்... ஹிந்துக்கள் சிந்தனைக்கு...




ஆஃபீஸில் சேர்ந்து விட்டு, அதற்கான ஆடை அணியாமல் இருந்தால் அங்கு மரியாதை கிடைக்காது
போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டு, 'காக்கி துணி அணியமாட்டேன், க்ராப் செய்து கொள்ள மாட்டேன்' என்று சொன்னால், 'போடா வெளியே.. உனக்கு இங்கு வேலை கிடையாது' என்று அனுப்பி விடுவார்கள்..
கோர்ட்டில் வக்கீலாக இருந்து கொண்டு, அதற்கான ஆடை அணிய மாட்டேன் என்றால், உள்ளே அனுமதிக்கவும் மாட்டார்கள். மரியாதையும் கிடைக்காது.

கூர்க்கா வேலை செய்தாலும் அதற்கான ஆடை, ஒழுக்க விதிகள் சொல்லப்படுகிறது.
பள்ளி செல்லும் போது அதற்கான யூனிபார்ம் போட மாட்டேன், பனியன் போட்டு தான் வருவேன் என்று சொன்னால், பள்ளியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
செருப்பு காலோடு சர்ச்சுக்குள் செல்லும் கிறிஸ்தவனுக்கு கூட, "பாதிரியார்" என்று ஆகும் போது, அதற்கான பாவாடையை அணிந்து கொள்கிறான். 
'ஊர் கேலி செய்யுமே!! அவமானமாக இருக்குமே!! ' என்று நினைத்து அதற்கான ஆடை அணியாமல் இருப்பதில்லை கிறிஸ்தவன்.

பாதிரியை பார்த்து கிறிஸ்தவ மக்களும் 'ஒய்.. பாவாடை' என்று கிண்டல் செய்வதும் இல்லை. பாதிரிக்கு கொடுக்கப்பட்ட உடை அது என்று வரம்பு தெரிந்து இருக்கிறார்கள்.
உலகமே நாகரீகம் என்ற பெயரில் அலைந்து கொண்டு இருக்க, இஸ்லாமிய பெண்கள் இன்றும் தங்களை, கருப்பு ஆடை கொண்டு மறைத்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
'உலகத்தோடு ஆட்டம் பாட்டம் போட முடியவில்லையே!!' என்று தனக்குள் நினைத்தாலும், விதித்த ஒழுங்கு முறையை இன்று வரை அவர்கள் விடவில்லை.



மீசையை மழித்து, தாடி மட்டும் வைத்து உலகமே 'தீவிரவாதி' என்று பார்க்கும் அளவிற்கு போன நிலையிலும், 'அதற்கும் என் ஆடைக்கும் சம்பந்தம் இல்லை' என்று இஸ்லாமிய ஆண்கள் அவர்களுக்கு சொல்லப்பட்ட ஆடை ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
'அடேய்.. தீவிரவாதி..' என்று நம்மை சொல்வானோ என்று இஸ்லாமியன் தனக்கு கொடுக்கப்பட்ட வேஷத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கவலைப்படவும் இல்லை.

ஒரு முல்லாவை பார்த்து, மற்ற இஸ்லாமியன் "மானத்தை வாங்காதே... ஊர் உலகம் போல ஜீன்ஸ் போட்டு, க்ராப் செய்து, ஷேவ் செய்து கொள், வேஷத்தை மாற்று" என்று சொல்வதும் இல்லை, கேலி செய்வதும் இல்லை.
ஆனால்,
ஒரு வேதியன், நெற்றியில் விபூதியும், குடுமியும், கச்சமும் கட்டி, கோவிலுக்கு பூஜைக்கு சென்றால், 'ஒய்.. குடுமி.. !! பூ வாங்கி போ' என்று ஹிந்துவே கேலி செய்கிறான். இப்படி கிண்டல் செய்பவனை மற்ற ஹிந்துக்கள் தடுத்து, மன்னிப்பு கேட்க செய்வதும் இல்லை.
எங்கே போகிறான் ஹிந்து?
ஹிந்துக்கள் அனைவருமே, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, நெற்றியில் விபூதியோ, சந்தனமோ, குங்குமமோ ஏதாவது இட்டு கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இட்டுக்கொள்ள வெட்கப்படுகிறான்.
நெற்றியில் ஒன்றும் இல்லாத இவன் ஹிிந்துவா? கிறிஸ்தவனா? என்று குழம்பும் அளவுக்கு இவனே தன்னை காட்டி கொள்ள, மத மாற்றத்துக்கும் இடம் கொடுக்கிறான்.






பெண்கள் "பெரிது பெரிதாக நகம் வளர்க்க கூடாது, தலை விரித்து அலைய கூடாது, நெற்றியில் கண்ணுக்கு தெரியும் அளவுக்காவது குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்" என்று சொன்னால், இன்றைய பெண்களால் எதையுமே ஏற்க முடியவில்லை.
அதே சமயம், இஸ்லாமிய பெண்களுக்கு "முகத்தை காட்டவே அனுமதி இல்லை" என்று சொன்னாலும், இது நம் ஆசாரம் என்று வாழ்கின்றனர் இன்று வரை.

"நீ வழிபடும் தெய்வங்களே நெற்றியில் இட்டுக்கொண்டு உள்ளதே, உனக்கு என்ன?" என்று கேட்டால், 'ஊரார் ஏதாவது சொல்வார்களோ!!' என்று நினைக்கிறான்.
தன் தெய்வம் இட்டு கொள்ளும் திலகத்தை தானும் இட்டு கொண்டு, 'நான் உன்னை சேர்ந்தவன்' என்று சொல்லிக்கொள்ள ஆசை இல்லை. ஊரை மகிழ்விக்க ஆசைப்படுகிறான்.


"தெய்வங்கள் தன் செயலை பார்த்து மகிழ வேண்டும்" என்று நினைப்பதை விட, "உலகத்தில் தன்னை பற்றி என்ன சொல்வார்களோ?" என்று நினைத்து சுய மரியாதை என்ற பிரமையில், வாழ போகும் 100 வருட வாழ்க்கைக்காக, தெய்வ அனுகிரஹத்தை இழக்க துணிகிறான்.

கோவிலுக்கு வந்தால் மட்டுமாவது, "பாரம்பரிய ஆடையான வேஷ்டி, புடவை அணிந்து செல்" என்றாலும் கேட்பதில்லை.
"போலீஸ் வேலை சேர்ந்தால்", போலீஸ் ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"ஆஃபீஸ் சென்றால்", அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"கூர்க்கா வேலை செய்தாலும்" அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன், 
"மற்ற மதத்தவன்" அவன் கலாச்சார ஆடை, வேஷம் போட்டு அலைவதை பார்த்தும்,
தன் கோவிலுக்கு செல்லும் போது, "நான் ஏன் வேஷ்டி அணிய வேண்டும்? நான் ஏன் புடவை அணிய வேண்டும்? இந்த ஆசாரம் எதற்கு? அது எதற்கு?" என்று கேட்கிறான்.

ஆபிஸ், கோர்ட், கூர்க்கா வேலை செய்தால், "அந்த அந்த இடத்துக்கான ஆடை ஒழுக்கத்தில் இருக்க வேண்டாமா?" என்று வேதாந்தம் பேசும் இவர்கள்,
"கோவிலுக்கு செல்லும் போது வேஷ்டி கட்ட வேண்டுமா? புடவை கட்ட வேண்டுமா?" என்று கேட்க துணிகிறார்கள்..

'தான் அவமானப்படுவோமோ' என்ற பயத்தை மறைக்க, பேடித்தனத்தை மறைக்க,
லட்சக்கணக்கான வருடங்களாக இருக்கும் பாரத தேசத்தில் இருக்கும் ஒழுக்கத்தை கெடுக்க கூட துணிகிறான்.

உலக கிண்டலுக்காக கோவிலையும் கெடுக்க முயலுகிறான்.
ஆசாரத்தையும் அழிக்க முயலுகிறான்.

"கோவிலில் உள்ள மூல விக்ரஹத்தை நானும் தொட்டால் என்ன?" என்று கேட்கிறான்.
'உனக்கு வழிபட உன் வீட்டிலேயே அதே போல விக்ரஹம் செய்து வழிபட அனுமதி உள்ளதே!' என்று சொன்னாலும், பக்தி இல்லாத, பொறாமை மட்டுமே கொண்டுள்ள இவர்கள், 'ஏன் நான் கோவிலில் உள்ள சிவபெருமானை தொட கூடாது?' என்று ஆசாரத்தை கெடுக்க முயலுகிறார்கள்.
இது பக்தியா? பொறாமை அல்லவா இது !! 
இது போன்று பேசுபவர்களை  ஹிந்துக்கள் அடக்க வேண்டாமா?

'பக்தி தான் காரணம், பொறாமை இல்லை என்றால்' சிதம்பரம் கோவிலுக்கு அருகிலேயே, 1000 ஏக்கர் நிலம் வாங்கி, உலகிலேயே பெரிய கோவிலை தாங்களே கட்டி, உலகிலேயே பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தன் கையாலேயே பூஜை செய்யலாமே?.. யார் தடுத்தார்கள்?
அப்படி ஒரு பக்தி செய்தால், தெய்வம் அணுகிரஹம் கூட செய்யுமே... 

பொறாமையை லட்சியமாக கொண்டு, காலம் காலமாக உள்ள ஆசாரத்தை கெடுத்து, தானும் ஆசாரம் இல்லாமல் வாழும் இவர்களை என்ன சொல்வது? அடக்க பட வேண்டியவர்கள் அல்லவா இது போன்ற விஷமிகள்.

இப்படி ஆசாரத்தை கெடுக்க முயற்சித்து கொண்டும்,
'தன் ஆடைக்கு தகுந்தாற்போல கோவில் ஆசாரத்தை மாற்றுவேன்' என்று சொல்லி கொண்டும்,
தன்னை யாரும் கேலி செய்வார்களோ! என்று நினைத்து, இவன் தகப்பனார் வரை காத்து வந்த  அற்புதமான கலாச்சாரத்தை இவன் காலத்தோடு அழிக்க முயலுகிறான்.


பக்தன் இப்படி தாறுமாறாக சென்று கொண்டு இருக்க,
கோவிலில் மூல விக்ரஹ தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள அர்ச்சகனும் தடம் புரண்டு ஓடுகிறான். இது அதைவிட வேதனையான விஷயம்,

தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள "அர்ச்சகனுக்கு",

  • "வேதம்" தெரிந்து இருக்க வேண்டும்.
  • சிவ பெருமானை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால் ருத்ரம், நாயன்மார் பாசுரம் தெரிந்து இருக்க வேண்டும்.
  • பெருமாளை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால், புருஷ சூக்தம், ஆழ்வார் பாசுரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
  • எந்த தெய்வங்களை தொட்டு அலங்காரம் செய்ய அர்ச்சகனுக்கு அனுமதி உள்ளதோ, அந்த தெய்வத்திடம் அசையாத 'பக்தி' வேண்டும்.
  • பணத்தில் விரக்தியும், பக்தியில் ஆர்வமும் வேண்டும்.
  • நாவடக்கம் வேண்டும்.
  • இன்முகம் உள்ளவனாக, வரும் பக்தர்களை கடிந்து கொள்ளாதவனாக இருக்க வேண்டும்.
  • ஆயுஸில் அசைவம் தொடாத, சாத்வீக உணவே உண்பவனாக இருக்க வேண்டும்,
  • 'குடுமி' வைத்து இருக்க வேண்டும்.
  • 'கச்சம்' கட்டி இருக்க வேண்டும்.
  • வீண் பொழுது போக்காமல் தெய்வ சிந்தனையே உள்ளவனாக, அது சம்பந்தமான திவ்யமான நூலை படித்து கொண்டு இருக்க வேண்டும்

என்று அர்ச்சகனுக்கும் விதி உள்ளது.
இப்படிப்பட்ட அர்ச்சகன் தன்னை தொடும் போது, அந்த பக்தனான அர்ச்சகரிடம் பேசுகிறார் பெருமாள்.

ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து,
குடுமி, கச்சம் இல்லாமல்,
வேதம் கற்காமல்,
ஒழுக்கமில்லாமல் வாழும் அர்ச்சகன் தொடும் போது,
அர்ச்ச அவதாரத்தில் உள்ள 'தெய்வங்கள் அருவெறுப்பு கொள்கிறார்கள்'.  
இதனால் பெரும் பாபத்தை சம்பாதிக்கிறான். குல நாசத்தை தனக்கே தோண்டிக்கொள்கிறான்.

அர்ச்ச அவதாரங்கள் செய்யும் தெய்வங்கள், ஆசாரங்களை மீறி, செய்யப்படும் ஒழுக்க கேடான செயல்களுக்கு சரியான தண்டனையை கொடுத்து விடுகிறார்கள்.
கோவிலில் உள்ள தெய்வங்கள் எதிர்பார்க்கும் முறைகளை கடைபிடிக்காமல்,
'ஏன்.. நான் இப்படி செய்தால் என்ன?..
நான் trouser போட்டு வந்தால் என்ன?
குடுமி இல்லாமல் பூஜை செய்தால் என்ன?, வேதம் ஓதாமல் மூல விக்ரகத்தை தொட்டால் என்ன?' 
என்று விதண்டா வாதம் செய்து தெய்வத்தை பழிக்கிறார்கள்.


மற்ற மதத்தவன் அவனவன் ஆடை ஒழுக்கத்தில் இருக்கிறானே, நாமும் இருந்தால் என்ன மோசம்? என்று நினைக்காமல் பேடியாக, உலகத்திற்கு பயந்து வாழ்கிறார்கள்.
வாழ்க்கை இழுக்கும் திசையெல்லாம் ஓடி, அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்களும் வேஷ்டி, புடவை கட்டிக்கொண்டு வருவதில்லை.
அர்ச்சகனுக்கும் குடுமி, கச்சம் இல்லை, வாயில் வேதமும் இல்லை, த்ரி கால சந்தியும் இல்லை.

இருவருக்குமே, தான் வழிபடும் தெய்வத்துக்கு பிடித்தமாதிரி வாழவேண்டும் என்றும் எண்ணம் இல்லை.

ஹிந்துக்கள் மற்றவர்களுக்காக வாழும் வரை, முதுகெலும்பு இல்லாதவரை, மற்றவர்கள் கேலிக்கு ஆளாக வேண்டியது தான்.

ஹிந்துக்கள் சிந்தனைக்கு...

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam -  Morning (With Meaning)



Sandhya Vandanam -  Afternoon (With Meaning)

Sandhya Vandanam -  Evening (With Meaning)