Followers

Search Here...

Showing posts with label யயாதி. Show all posts
Showing posts with label யயாதி. Show all posts

Wednesday 19 June 2024

மக்களை, தர்மத்தில் சரியாக வழிநடத்தி கொண்டு, 2வது இந்திரனை போல யயாதி அரசாட்சி செய்தார்.

இளமையை தன் மகனான புருவிடம் பெற்று கொண்ட யயாதி

தேவர்களை, யாகங்கள் செய்து மகிழ்வித்தார்.

பித்ருக்களை, ஸ்ரார்த்தம் செய்து மகிழ்வித்தார்.

ஏழைகளுக்கு தேவையான கருவிகளை அன்போடு கொடுத்தார். 

ப்ராம்மணர்களுக்கு தேவையானதை கொடுத்தார்.

விருந்தினர்களுக்கு, உணவும், பானமும் கொடுத்தார்.

வைஸ்யர்களின் செல்வத்தை காப்பாற்றினார்.

சூத்திரர்களிடம் இரக்கத்தோடு இருந்தார்.

திருடர்களுக்கு, நியாயமான தண்டனை கொடுத்தார்.

மக்களை, தர்மத்தில் சரியாக வழிநடத்தி கொண்டு, 2வது இந்திரனை போல யயாதி அரசாட்சி செய்தார்.


देवानतर्पयद् यज्ञैः श्राद्धै: तद्वित् पितॄनपि।

दीनान् अनुग्रहै: इष्टैः कामै: च द्विजसत्तमान्।।

अतिथीन् अन्न पानै: च विश: च परिपालनैः।

आनृशंस्येन शूद्रां च दस्यून्सन्निग्रहेण च।।

धर्मेण च प्रजाः सर्वा यथावदनुरञ्जयन्।

ययातिः पालयामास साक्षादिन्द्र इवापरः।।

 - ஆதி பர்வம்