Followers

Search Here...

Showing posts with label காந்தர்வ. Show all posts
Showing posts with label காந்தர்வ. Show all posts

Sunday 21 July 2024

பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, காந்தர்வ, ராக்ஷஸ திருமணங்கள் பற்றி துஷ்யந்தன், சகுந்தலைக்கு சொல்கிறார்.

க்ஷத்ரிய அரசனான துஷ்யந்தன், காந்தர்வ திருமணம் செய்து கொள்ளலாம் என்று சகுந்தலையை கேட்டார். 

துஷ்யந்தன் அப்போது, தர்ம சாஸ்திரம் காந்தர்வ மணம் க்ஷத்திரியனுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை இவ்வாறு சொன்னார்.


अष्टावेव समासेन विवाहा धर्मतः स्मृताः।

ब्राह्मो दैव: तथैव आर्षः प्राजापत्य स्तथा आसुरः।

गान्धर्वो राक्षस: चैव पैशाच: च अष्टमः स्मृतः।।

பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, ஆசுர (rape and marry), காந்தர்வ (love marriage), ராக்ஷஸ (capture and marry), பைசாச ஆகிய 8 திருமணங்கள் தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.


तेषां धर्म्यान्यथा पूर्वं मनुः स्वायंभुवो अब्रवीत्।।

இந்த 8 திருமணங்களில் யார் யாருக்கு எது தர்மமான திருமணம் (விவாஹம்) என்று முன் காலத்தில் ஸ்வாயம்பு மனு சொன்னதை அப்படியே உனக்கு சொல்கிறேன்..


प्रशस्तां चतुरः पूर्वान् ब्राह्मणस्य उपधारय।

षडानु पूर्व्या क्षत्रस्य विद्धि धर्म्यान् अनिन्दिते।

राज्ञां तु राक्षसो अप्युक्तो विट्शूद्रेष्व आसुरः स्मृतः।

ப்ராம்மணனுக்கு (MLA, MP, Advocate, Judge, CM, PM, Vedic Scholars, Vedic Priest, Teachers) முதல் 4 திருமணங்கள் (பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய) அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

க்ஷத்திரியனுக்கு (police, defence, army) முதல் 6 திருமணங்கள் (பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, ஆசுர, காந்தர்வ) அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

ராக்ஷஸ திருமணம் க்ஷத்ரியர்களில் ராஜாக்களுக்கு (army chief) மட்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. 

வைஸ்யர்களுக்கும் (employer), சூத்திரர்களுக்கும் (employee) அசுர திருமணம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.


पञ्चानां तु त्रयो धर्म्या अधर्म्यौ द्वौ स्मृताविह।

पैशाच आसुरश्चैव न कर्तव्यौ कदाचन।।

- வ்யாஸ மஹாபாரதம் 

5 திருமணங்கள் (பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, காந்தர்வ, ராக்ஷஸ) எப்பொழுதுமே தர்மமான திருமணம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மற்ற 2 திருமணங்கள் (ஆசுர, பைசாச) எப்பொழுதுமே அதர்மமான திருமணம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆசுர, பைசாச திருமணங்கள் எந்த நிலையிலும் செய்யவே கூடாது.


இவ்வாறு சொல்லி, தான் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சகுந்தலையிடம் துஷ்யந்தன் சொன்னார்.